28 January, 2010

தேடிச் சோறுநிதந் தின்று - பாரதி

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -

மனம் வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -

நரை கூடிக் கிழப்பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -

பல வேடிக்கை மனிதரைப்போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?