29 March, 2010

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!

நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்



புதிய நாளில்

நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்

கண்ணீர் துளிகள் கூட

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!



உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!

2 comments:

Anonymous said...

<3 them..:)... Jus kindling d lost love...

Unknown said...

Thanks for the comment :)