நித்தம்... நித்தம்.....
நீ
எத்தனை
முத்தங்கள் தந்தாலும்
புதிய நாளில்
நான்
ஏழையாகவே
வந்து நிற்கிறேன் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்
கண்ணீர் துளிகள் கூட
கன்னத்தை முத்தமிட்டு தான்
விடை பெறுகின்றன.......
உனைப்பிரிய மனமில்லாத
எனக்கு மட்டும் என்ன
விதி விலக்கா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான்
வாங்கித் தந்த
பூவை
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
வைத்து விட சொல்கிறாய்......!
உன் கூந்தலுக்குள்
மாட்டிக் கொள்கிறது
பூவும்
அதனோடு சேர்ந்து
என் மனசும்!!!
29 March, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
<3 them..:)... Jus kindling d lost love...
Thanks for the comment :)
Post a Comment